LATEST NEWS
“என்ன கொடுமை இது..? உணவு சாப்பிடக்கூட வெளியில் வர முடியாதா… 5 வருஷமா தண்ணிக்குள்ளேயே வாழும் 16 வயது சிறுவன்…! நெஞ்சை பதற வைக்கும் நிஜக் கதை..!!
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டங்காவைச் சேர்ந்த 16 வயது இக்பால் ஷேக், மருத்துவ அறிவியலுக்கே சவால் விடும் வகையில் ஓர் அரிய உடல்நலப் பிரச்சனையுடன் வாழ்ந்து வருகிறார். பிற குழந்தைகளைப் போல விளையாடவோ, பள்ளிக்குச் செல்லவோ முடியாத சூழலில், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரது வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. தண்ணீரை விட்டு வெளியே வந்தாலே உடல் முழுவதும் தீயில் எரிவது போன்ற கடுமையான வேதனை ஏற்படுவதாக இக்பால் கூறுகிறார். மீண்டும் தண்ணீருக்குள் சென்ற பிறகே அந்த வலி குறைந்து உடல் குளிர்ச்சியடைகிறது. இதனால் ஒரு மீனைப் போல நாளின் பெரும்பகுதியை, இரவு நேரங்கள் உட்பட, குளத்திலேயே கழிக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
உணவு சாப்பிடுவதற்குக்கூட தண்ணீரை விட்டு வெளியே வர முடியாத நிலை இருப்பதால், குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் அவருக்கு உணவு, சிற்றுண்டி மற்றும் பழங்களை தண்ணீரிலேயே கொண்டு சென்று வழங்குகின்றனர். மகனின் இந்த நிலையைக் கண்டு கவலையடைந்த பெற்றோர் அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள மருத்துவ நிபுணர்களின் ஆரம்பக் கருத்துப்படி, இது அரிய வகையான தோல் அல்லது நரம்பியல் தொடர்பான பிரச்சனையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இக்பாலின் நிலைக்கான துல்லியமான காரணத்தையும் உரிய சிகிச்சையையும் கண்டறிய மேலும் மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.
https://www.instagram.com/reel/Db0v3WxypDm/?utm_source=ig_web_button_share_sheet
நீண்ட நேரம் தண்ணீரில் இருப்பதால் இக்பாலுக்கு அவ்வப்போது கடுமையான சளி, இருமல் உள்ளிட்ட உபாதைகளும் ஏற்படுகின்றன. ஏற்கெனவே கடுமையான உடல் வேதனையுடன் போராடி வரும் சிறுவனுக்கு, இந்தப் பிரச்சனைகளும் கூடுதல் சுமையாக மாறியுள்ளன. சிறந்த மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அதிக செலவாகும் என்பதால், பொருளாதார வசதி குறைந்த இக்பாலின் குடும்பம் உதவிக்காகக் காத்திருக்கிறது. இதையறிந்த கிராம மக்களும் உறவினர்களும் அவருக்கு மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க நன்கொடைகள் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிற குழந்தைகள் விளையாடும் வயதில், தண்ணீருக்குள் மட்டுமே நிம்மதியைத் தேடி வாழும் இக்பாலுக்கு விரைவில் உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
