LATEST NEWS
BREAKING: தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 9000 கன அடி நீர் திறக்கணும்.. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9000 கன அடி வீதம் தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் முக்கியமான கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்று குழு (CWRC) அளித்த பரிந்துரையை முழுமையாக ஏற்றுக்கொண்டு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அதிகாரிகள் பங்கேற்றுத் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர். டெல்டா மாவட்டங்களின் விவசாயத் தேவைகள் மற்றும் தற்போதைய நீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, தமிழக விவசாயிகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ள அதேவேளையில், கர்நாடகா இதனை எவ்வாறு செயல்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
