LATEST NEWS
பிக்பாஸில் இருந்து வெளியேறியவுடன் முக்கிய நபரை சந்தித்த ரச்சிதா…. மனம் உருகி பதிவு போட்ட பிரபலம்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கிட்டத்தட்ட 90 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது ஏழு போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு ரட்சிதா வெளியேறினார்.
எதிர்பாராத விதமாக ரச்சிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சீரியல் பிரபலம் பிரேமி வெங்கடை சந்தித்து ரட்சிதா புகைப்படம் எடுத்துள்ளார். அதனை பிரேமி வெங்கட் பதிவு செய்து உறுதி ஒரு விஷயத்தையும் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
