LATEST NEWS
“கோபத்தின் உச்சிக்கே சென்ற மமதா.. சொந்த தொண்டருக்கு விழுந்த பளார் அடி.. நடந்தது என்ன?.. கொல்கத்தாவில் நட்ட நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்”..!!
கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு பேரணிக்குக்குப் பிறகு, கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தன் கட்சித் தொண்டர் ஒருவரை அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காளிகாட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. பேரணியின் போது பல தொண்டர்களும் தலைவர்களும் காயமடைந்ததால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகனங்களை ஏற்பாடு செய்யும் பணியில் மம்தா பானர்ஜி நேரடியாகத் தலையிட்டார். அப்போது வாகனங்கள் விரைவாகச் செல்வதற்காக, அங்கு திரண்டிருந்த கட்சித் தொண்டர்களைப் பாதையை விட்டு விலகுமாறு அவர் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.
இந்தக் குழப்பமான மற்றும் கூச்சலான சூழ்நிலைக்கு மத்தியில், தனக்கு பின்னால் நின்று பாதுகாப்பு வளையத்தை உருவாக்க முயன்ற தொண்டர் ஒருவரின் மீது மம்தா பானர்ஜி திடீரென தன் நிதானத்தை இழந்து அவரை அறைந்தார். இந்தத் தருணம் அங்கிருந்த கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து திரிணாமூல் காங்கிரஸ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அல்லது அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில், இது தொடர்பான கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
