LATEST NEWS
ரேஷன் அரிசியை இட்லி மாவு அரைக்க தான் யூஸ் பண்ணுறாங்க.. யாருமே சாப்பிடுறது இல்ல அதனால் தான்… சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி..!!
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தற்போதைய ரேஷன் அரிசியின் பயன்பாடு மற்றும் அதன் தரத்தை உயர்த்துவதற்கான அரசின் புதிய திட்டங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது தற்போதைய சூழலில் 90 சதவீத மக்கள் ரேஷன் அரிசியை நேரடியாகச் சமைத்துச் சாப்பிடுவதில்லை என்றும், அது பெரும்பாலும் இட்லி மாவு அரைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் எதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையை மாற்றி, மக்கள் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் அளவுக்கு ரேஷன் அரிசியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே உரையின் மையக்கருத்தாக உள்ளது.
ரேஷன் கடைகளில் அனைவருக்கும் உயர்தரமான அரிசி கிடைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் அவர்கள் உறுதியாக இருந்து, அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அதிரடி உத்தரவின் காரணமாகவே, விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சன்ன ரக அரிசிக்கு அதிக ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். இந்த உற்பத்தி ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம், விரைவில் தமிழக மக்களுக்குத் தரமான சன்ன ரக அரிசி ரேஷன் கடைகள் வழியாக விநியோகிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
