LATEST NEWS
நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் டும் டும்?….. குடும்பத்துடன் கோவிலில் சாமி தரிசனம்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!
தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். இதனை தவிர்த்து ஜெயம் ரவி நடிப்பில் சைரன் திரைப்படத்திலும் தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக தனது குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளைக்கு அவர் ஓகே சொல்லியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில் மஞ்சள் நிற சுடிதார் அணிந்தபடி கீர்த்தி சுரேஷ் கோவிலில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது.
கீர்த்தியின் பாட்டி சரோஜாவின் வீடு நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ளது. திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதால் அங்குள்ள பெருமாள் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று கீர்த்தி சுரேஷ் சிறப்பு தரிசனம் செய்ததாக ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து இது தொடர்பான எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க