TRENDING
‘அரை குறை ஆங்கில டீச்சர்’ ?’.. ‘மாணவர்கள் முன் இங்லீஷ் படிக்க திணறிய ஆசிரியர்!’.. தரமான.. வீடியோ!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவோ மாவட்டத்தில் இருக்கும் சிக்கந்தர்பூர் சரௌசி கிராமத்தில் இயக்கி வரும் அரசு பள்ளிக்கு ஆய்வுக்காக தீடிர் என்று சென்ற மாவட்ட நீதிபதி தேவேந்திரகுமார் பாண்டா பள்ளியை சுற்றி பார்த்துவந்தார்.
தீடிர் என்று ஒரு வகுப்பறைக்கு சென்ற நீதிபதி பாடம் நடத்தி கொண்டிருந்த ஆங்கில ஆசிரியரை அழைத்து ஆங்கில புத்தகத்தை கொடுத்து அதில் இருக்கும் சில வரிகளை படிக்க சொன்னார்.
தயங்கியபடி புத்தகத்தை வாங்கிய ஆசிரியை மிகவும் தடுமாறி , தடுமாறி தவராகபடித்து வந்தார் ஒருக்கட்டத்தில் அந்த வரிகளின் அர்த்தத்தை கூறினார் இதில் கோவமான நீதிபதி உங்களிடம் அந்த வரிகளைத்தான் படிக்க சொன்னே அதில் இருக்கும் அர்த்தத்தை இல்ல என்று கூறினார்.
#WATCH Unnao: An English teacher fails to read a few lines of the language from a book after the District Magistrate, Devendra Kumar Pandey, asked her to read during an inspection of a govt school in Sikandarpur Sarausi. (28.11) pic.twitter.com/wAVZSKCIMS
— ANI UP (@ANINewsUP) November 30, 2019
பின்னர் சக அதிகாரிகளிடம் இந்த ஆசிரியை உடனைடியாக பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். என்ன கொடுமை சார் இது ஒரு ஆசிரியருக்கே தெரியவில்லை என்றால் அவர்களிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்னாவது..?