ரூ.2 கோடி ஆசை காட்டி 17 வயது சிறுவன் கொடூரக் கொலை… வெளிநாட்டிற்கு விற்க விதைப்பைகளை அறுத்து எடுத்த திடுக்கிடும் கும்பல்.. போலீஸ் விசாரணையில் பகீர்! – cinefeeds
Connect with us

CRIME

ரூ.2 கோடி ஆசை காட்டி 17 வயது சிறுவன் கொடூரக் கொலை… வெளிநாட்டிற்கு விற்க விதைப்பைகளை அறுத்து எடுத்த திடுக்கிடும் கும்பல்.. போலீஸ் விசாரணையில் பகீர்!

Published

on

போபாலைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கடந்த ஆகஸ்ட் 6 அன்று திடீரென காணாமல் போனான். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 5 நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 11 அன்று சிறிய தலாப் (Chhota Talab) பகுதியில் அவனது சடலம் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து, ஆகஸ்ட் 14 அன்று அவனது ஆடைகள் மற்றும் செருப்புகளை வைத்து அது காணாமல் போன சிறுவனின் சடலம் தான் என்பதை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக 13 சந்தேக நபர்களைக் காவல் துறையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்த சிறுவனுக்கு ₹2 கோடி தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவனது விதைப்பைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்காக ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளது தெரியவந்தது. மேலும், சிறுவனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தபோது அவனது விதைக் பைகள் துண்டிக்கப்பட்டு அகற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருவதாகக் கூறிய கூடுதல் துணை ஆணையர் ஷைலேந்திர சிங் சௌஹான், இந்த சட்டவிரோத உறுப்பு விற்பனை கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் மற்றும் வெளிநாட்டிற்கு அனுப்பத் திட்டமிட்ட முழு பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஏற்கனவே இதேபோல் விதைக் பைகள் அகற்றப்பட்ட நிலையில் மற்றொரு சடலமும் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in