LATEST NEWS
“விஜய்க்கு ஆபத்தே அவர்தான்… தவெக-வை அழிக்க வந்த கொட்டும் தேள்!”… புதிய குண்டை தூக்கி போட்ட ஆர்.எஸ். பாரதி.. பரபரக்கும் அரசியல் களம்..!!
திமுக மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி தற்போதைய அரசியல் சூழல் குறித்து காரசாரமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழக முதல்வர் விஜய்க்கு ஏதேனும் ஆபத்து வரப்போகிறது என்றால், அது ஆதவ் அர்ஜுனாவால் மட்டும்தான் நடக்கும் என்று எச்சரித்துள்ளார். மேலும், ஆதவ் அர்ஜுனாவை ஒரு ‘கொட்டும் தேள்’ என்று வர்ணித்த ஆர்.எஸ்.பாரதி, திமுகவில் எம்பி சீட் கிடைக்காத காரணத்தினாலேயே அவர் முதலில் விசிகவுக்குச் சென்றதாகவும், தற்போது தவெகவில் இணைந்து அமைச்சராக உள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து தவெக மற்றும் விசிக அரசியல் நகர்வுகளைச் சாடிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) முற்றிலும் அழிப்பதற்கு ஆதவ் அர்ஜுனா ஒருவரே போதும் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். விசிக மற்றும் தவெகவின் தற்போதைய கூட்டணி அல்லது அரசியல் நகர்வுகளை விமர்சிக்கும் வகையில் பேசிய அவர், இப்படிப்பட்ட கொட்டும் தேள்களை எப்படி வெட்டி வீழ்த்த வேண்டும் என்ற தந்திரமும், சக்தியும் ஆளுங்கட்சியான திமுகவுக்கு நன்றாகவே தெரியும் என்றும் சவால் விடுத்துள்ளார்.
