LATEST NEWS
ஐயோ..! “அந்த பச்சபுள்ள என்ன பாவம் பண்ணுச்சு.?” – குடும்பத் தகராறால் 8 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்த தாய்.. மதுரையில் அதிர்ச்சி…!!
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த புனிதா (22) என்ற பெண், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தகராறு காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர், தன் வாழ்வை முடித்துக் கொள்ளும் அதீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மன உளைச்சலின் உச்சத்தில், புனிதா தனது 8 மாதப் பெண் குழந்தையான ரியாவிற்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் விஷத்தைக் குடித்துள்ளார். இருவரும் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்ட உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் அதிர்ச்சியடைந்து, உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 8 மாதக் குழந்தையான ரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. தாய் புனிதா தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாகக் கொட்டாம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
