என்ன மனுஷன்யா..? தேசிய கீதத்தின் போது அழுத சிறுமி.. மைதானத்தில் ஓடிவந்து நெய்மர் செய்த அன்பான செயல்… இணையத்தை வெல்லும் நெய்மரின் தங்க குணம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன மனுஷன்யா..? தேசிய கீதத்தின் போது அழுத சிறுமி.. மைதானத்தில் ஓடிவந்து நெய்மர் செய்த அன்பான செயல்… இணையத்தை வெல்லும் நெய்மரின் தங்க குணம்..!!

Published

on

பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர், மைதானத்தில் சிறுமி ஒருவரிடம் காட்டிய அன்பான செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறது. தற்போது சாண்டோஸ் அணிக்காக விளையாடி வரும் நெய்மர், மிராசோல் அணிக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்தில் அணிவகுத்து நின்றிருந்தார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, அவருக்கு அருகில் நின்றிருந்த ஒரு சிறுமி உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்.

அதை கவனித்த அந்தச் சிறுமி உடனடியாக நெய்மரை ஓடிவந்து கட்டியணைக்க, அவரும் மறுப்பு தெரிவிக்காமல் அந்தச் சிறுமியை அன்போடு அரவணைத்துக் கொண்டார். தேசிய கீதம் பாடி முடிந்ததும், நெய்மர் அந்தச் சிறுமியின் கண்ணீரைத் தனது கைகளால் மெதுவாகத் துடைத்து ஆறுதல் கூறினார். இதைப் பார்த்த அங்கு நின்றிருந்த மற்ற குழந்தைகளும் நெய்மருடன் ஒரு மறக்கமுடியாத தருணத்தைப் பகிர்ந்துகொள்ள அவரை நோக்கி ஓடி வந்தனர்.

Advertisement

கால்பந்து மைதானத்தின் கடுமையான போட்டிச் சூழல்களுக்கு மத்தியில், குழந்தைகளின் மீது நெய்மர் காட்டும் இந்த மென்மையான மற்றும் அன்பான குணம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடுதல் நிறைந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in