‘என் காதலுக்கு கண் உண்டு’.. ‘ஆனால் கைகால்கள் தான்’.. ‘உலகையே மிஞ்சிய காதல் திருமணம்’… “கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்” - cinefeeds
Connect with us

Uncategorized

‘என் காதலுக்கு கண் உண்டு’.. ‘ஆனால் கைகால்கள் தான்’.. ‘உலகையே மிஞ்சிய காதல் திருமணம்’… “கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்”

Published

on

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இருஞ்ஞால குடா என்ற பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (25). B.com படித்துள்ளார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர். ஒரு விபத்தில் சிக்கி கொண்டார். அதன் பின்னர் அவரது கைகால்கள் செயலிழந்தது. இதனால் சக்கர நாற்காலியில் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். சற்றும் மனம் தளராத பிரணவ் அனைத்து தரப்பு மக்களுக்கும் தன்னம்பிக்கை வரும் வகையில் சமூக சேவைகள் செய்து வருவார்.

மேலும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவான செயல் செயல்பாடுகள் செய்துவருவார். மேலும் ஊனம் எந்த ஒரு செயலுக்கு தடையில்லை, மனசு தான் முக்கியம் என்று மோட்டிவேஷன் செய்துவருகிறார்.
அந்த வகையில் பிரணவின் வீடியோக்களை பார்த்து சஹானா என்ற பெண் பிராணாவின் மீது ஈர்ப்புக் கொண்டுள்ளார்.

Advertisement

பின் முகநூல் வழியாக தொடர்பு கொண்டு பிரணவிடம் நட்பாக பழக வந்துள்ளார். நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியது பிரணவிடம் சஹானா தான் காதலிப்பதை தெரிவித்துள்ளார். ஆனால் தனது ஊனம் மற்றும் உடல்நிலையை கூறி பிரணவ் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதனையறிந்த சஹானாவின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் தனது காதலில் உறுதியாக இருந்த சஹானா ஒருநாள் காதலர் பிரணவை தேடி அவரது வீற்றிக்கே சென்றுள்ளார். பின் பிராணாவின் பெற்றோர்களிடம் உங்கள் மகனை காதலிக்கிறேன் மேலும் அவரை திருமணம் செய்யப்போகிறேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள். இதற்க்கு மறுப்பு தெரிவித்தனர்.

Advertisement

https://www.facebook.com/varietymedia.in/videos/573551590037405/

பின்னர் தொடர்ந்த உறுதியாகவும் தன் காதல் மீது நம்பிக்கை வைத்து பிடிவாதமாகவும் இருந்து வந்தார் சஹானா பின்னர் இரண்டு தரப்பு பெற்றோராலும் சம்மத்தித்த நிலையில். பின்னர் இருவரும் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இந்த சம்பவம் உண்மையான காதலுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று பலரும் கூறிவருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in