Uncategorized
‘தைரியம் இருந்தால் முகத்திரை கிழிந்து’…, “சாயம் வெளுக்கும் இளமதி விவகாரம்”…! டரியலாக்கிய திமுக எம்.பி
சேலம் மாவட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேட்டூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதி கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நேற்று காவல்நிலையத்தில் ஆஜரான அவர், பின்னர் அவர் தாயுடன் வீட்டிற்கு சென்றார்.
இதனையடுத்து, தனது மகளை கடத்தி காதல் திருமணம் செய்த்தாக பவானி காவல் நிலையத்தில் திவிக தலைவர் கொளத்தூர் மணி, செல்வன் உட்பட 4 பேர் மீது இளமதியின் பெற்றோர் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இதுகுறித்து தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தனது சோசியல் மீடியாவில்: தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டபடுகிறது., சமூக நீதி மறுக்கபடுகிறது. தற்காலிக வெற்றி என நம்பும் கோழைகளிடம் கேட்கிறேன். தைரியம் இருந்தால் இளமதியை தனியாக பிரஸ்மீட் அனுப்புங்க. அப்போ உங்க முகத்திரை கிழிந்து, சாயம் வெளுக்கும் அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள். என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டபடுகிறது.,
சமூக நீதி மறுக்கபடுகிறது
தற்காலிக வெற்றி என நம்பும் #கோழைகளிடம் கேட்கிறேன்.#தைரியம் இருந்தால் இளமதியை தனியாக press meet அனுப்புங்க. அப்போ உங்க முகத்திரை கிழிந்து,சாயம் வெளுக்கும் அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள்.😡
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) March 14, 2020