LATEST NEWS
“நீதி கிடைக்கல…” போலீஸ் ஸ்டேஷனிலேயே 26 வயது பெண் செய்த விபரீதம்… இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் அமைந்துள்ள மகாராஜ்பூர் காவல் நிலையத்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பிங்கி என்ற 26 வயது பெண், தங்கள் வீட்டில் நுழைந்து சிலர் ரகளையில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் புகார் அளிக்க வந்துள்ளார். தனது தாயாருடன் காவல் நிலையம் வந்த அவரை, காவல்துறையினர் நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, அவரது புகாரைச் சரியாகப் பரிசீலிக்காமல் அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கும் ஏமாற்றத்திற்கும் ஆளான பிங்கி, காவல் நிலைய வளாகத்திலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
पुलिस सुनवाई नहीं कर रही थी तो 26 साल की पिंकी ने थाने के अंदर ही जहर खा लिया है। अब पिंकी अस्पताल में गंभीर हालत में भर्ती है।
पिंकी के घर पर कुछ गुंडों ने अभद्रता और फायरिंग की थी। शिकायत के लिए पिंकी अपनी माँ के साथ थाने गई लेकिन महाराजपुर थाना में बैठाया रखा और सुनवाई नहीं… pic.twitter.com/D1CxsxGRBg— Madan Mohan Soni (@madanmohansoni) August 2, 2026
காவல் நிலையத்திற்குள் பெண் ஒருவர் விஷம் அருந்திய சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்திலேயே, நீதி கிடைக்காத விரக்தியில் பெண் ஒருவர் இத்தகைய உச்சக்கட்ட முடிவை எடுத்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், காவல்துறையின் செயல்பாடுகள் மீதான கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
