LATEST NEWS
“என்னோட 500 ரூபாய் காணோம்” எல்லாரும் டிரஸ்ஸைக் கழட்டுங்க… ஆடை கழற்றச் சொல்லி அரசுப் பள்ளி ஆசிரியை கொடூரம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், வெறும் 500 ரூபாய் பணம் காணாமல் போனதற்காக, மாணவிகளின் ஆடைகளைக் களையச் செய்த பெண் ஆசிரியையின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் தான் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டு காணாமல் போனதாகக் கூறி, அங்கிருந்த மாணவிகள் மீது அந்த ஆசிரியை சந்தேகம் அடைந்துள்ளார். பணத்தைத் தேடுவதாகக் கூறி மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டுள்ளார்.
பணத்தைத் திருடியது யார் என்று கண்டுபிடிப்பதற்காக, அங்குள்ள மாணவிகள் அனைவரையும் தங்களது ஆடைகளைக் கழற்றுமாறு அந்த ஆசிரியை கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், ஆடைகளைக் கழற்ற விரும்பாத மாணவிகள், தன்னிடம் 500 ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறலாம் என்றும் கொடூரமான நிபந்தனை விதித்துள்ளார். ஆசிரியையின் இந்த மிரட்டலால் மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கும் அவமதிப்பிற்கும் உள்ளாகியுள்ளனர்.
https://twitter.com/CptoneP/status/2078340575330435128/video/1
இந்த அதிர்ச்சி ஊட்டும் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்படைந்து பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர். பொதுமக்களின் இந்த கடுமையான எதிர்ப்பையும் ஆத்திரத்தையும் தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டனர். மாணவிகளிடம் அநாகரிகமாகவும் கொடூரமாகவும் நடந்து கொண்ட அந்த பெண் ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.
