LATEST NEWS
“நெஞ்சை பதறுது..! பறந்து வந்த பட்டத்திற்குள் ஒளிந்திருந்த மரண எமன்..!” 12 வயது சிறுவனின் அலறல் சத்தம்.. நெட்டிசன்களை கண்கலங்க வைக்கும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன், அறுந்து பறந்து வந்த பட்டத்தைப் பிடிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அதிவேக மின்சாரம் பாயும் ஹை-டென்ஷன் கம்பியைத் தொட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிறுவர்களின் விளையாட்டாகக் கருதப்படும் பட்டம் விடும் பழக்கம், ஒரு பிஞ்சு உயிரைப் பறிக்கும் அளவுக்கு விபரீதமாக மாறியுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A 12-year-old boy from a poor family in Moradabad lost his life after coming in contact with a high-tension wire while trying to catch a kite. 💔
The video is absolutely heartbreaking. One kite is simply not worth risking your life for.
A life is far more precious than anything… pic.twitter.com/87rcLUQ2FG— Amit Kumar Sindhi (@AMIT_GUJJU) August 24, 2026
பட்டத்தைப் பிடிக்கும் ஆர்வத்தில், அந்த மின் கம்பிகளில் பாயும் பேராபத்தை அறியாமல் அந்தச் சிறுவன் கையை வைத்ததும், அசுர வேக மின்சாரம் அவனது உடலுக்குள் பாய்ந்து ஒட்டுமொத்த வாழ்க்கையையும் முடித்துவிட்டது. இந்த நெஞ்சை உலுக்கும் கொடூர விபத்து குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களைக் கண்ணீர் சிந்த வைத்துள்ளதோடு, பெற்றோருக்கு ஒரு கடுமையான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. வெறும் சில ரூபாய் மதிப்புள்ள ஒரு சாதாரண பட்டத்திற்காகத் தன் விலைமதிப்பற்ற இன்னுயிரைப் பணயம் வைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இந்தத் துயரச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
