LATEST NEWS
‘அழகானவள்’ சொன்னது குத்தமா?”.. IPS தந்தைக்கு விழுந்த சம்மட்டி அடி.. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் மாஸ் அதிரடித் தீர்ப்பு..!!
கர்நாடகாவில் இன்ஸ்டாகிராமில் தனது வகுப்பறைத் தோழிக்கு ‘அழகானவள்’ என மெசேஜ் அனுப்பிய 20 வயது கல்லூரி மாணவர் மீது, அப்பெண்ணின் ஐ.பி.எஸ் அதிகாரி தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவியல் வழக்குப் பதிவு செய்தனர். தனது தோழியின் புகைப்படத்திற்கு அனுப்பப்பட்ட இந்த சாதாரண மெசேஜை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், இளைஞர்களுக்கு இடையேயான இந்த உரையாடல் வெறும் ‘Gen Z’ சமூகப் பேச்சுவழக்கை மட்டுமே பிரதிபலிப்பதாக சுட்டிக்காட்டியது. இதில் அப்பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலோ அல்லது அச்சுறுத்தும் வகையிலோ எந்தவித தவறான உள்நோக்கமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய நீதிபதிகள், மாணவர் மீதான குற்றவியல் வழக்கை முற்றிலுமாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.
