CINEMA
விஜய் டிவியிலிருந்து பிரியங்கா, கோபிநாத் வெளியேற்றமா..? உண்மை என்ன..? பிரபலம் சொன்ன தகவல்..!!

பிரபல விஜய் தொலைக்காட்சியை கலர்ஸ் நிறுவனம் வாங்கி விட்டதாக அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியாகி வருகிறது. விஜய் டிவியில் பணிபுரிந்து வரும் தொகுப்பாளினி பிரியங்கா, நீயா நானா கோபிநாத் ஆகியோரும் விஜய் டிவியில் இருந்து வெளியேறப் போவதாகவும் கூறப்பட்டது. விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளுக்கு மூடுவிழா நடத்தி விட்டு கலர்ஸ் நிறுவனம் புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப போவதாகவும் தகவல் வெளியாகி வந்தது.
ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவரவில்லை. அதாவது பிரியங்கா தேஷ் பாண்டே விஜய் டிவியில் இருந்து விலகவில்லை. அவர் திருமணத்தை முடித்த கையோடு ஹனிமூன் சென்றுள்ளார். ஹனிமூன் முடிந்து திரும்பியதும் மீண்டும் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார். அதேபோல கோபிநாத் விஜய் டிவியில் இருந்து விலக எந்த வாய்ப்பும் இல்லை. நீயா நானா நிகழ்ச்சி முடிவுக்கு வரவில்லை .கோபிநாத் விஜய் டிவியில் இருந்து வெளியேறவில்லை என்றும் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்து தான் இந்த தகவலை கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலமாக பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.