“என்கிட்டயே கை வைக்கிறியா..?” லஞ்சம் கேட்ட போலீஸை அலறவிட்ட யூடியூபர்.. நடுரோட்டில் வண்டியை நிறுத்தி செய்த சம்பவம்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்கிட்டயே கை வைக்கிறியா..?” லஞ்சம் கேட்ட போலீஸை அலறவிட்ட யூடியூபர்.. நடுரோட்டில் வண்டியை நிறுத்தி செய்த சம்பவம்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

தெலங்கானா எல்லைப் பகுதியில் அரசு கலால் துறை என்ற பெயரில் லாரி ஓட்டுநர்களிடம் பகிரங்கமாக சட்டவிரோதப் பணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி யூடியூபர் ‘டிராக்டு ஷியாமல்’பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தெலங்கானாவிற்குள் நுழையும் போது, பல ஆண்டுகளுக்கு முன்பே அரசால் மூடப்பட்ட ஒரு சோதனைச் சாவடியில், லாரிகளிடம் ரூ.20 முதல் ரூ.200 வரை கட்டாய வசூல் செய்யப்படுவதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது லாரியை நிறுத்தி ரூ.200 லஞ்சம் கேட்டபோது, அதைத் தன் கேமராவில் பதிவு செய்துள்ளார். பணம் கேட்ட சீருடை அணியாத, தொப்பி மற்றும் பெயர் பலகை இல்லாத நபர், காலணிகளுடனும் உடைந்த பொத்தான்கள் கொண்ட சட்டையுடனும் அங்கிருந்த ஒரு தனியாரோடு சேர்ந்து லஞ்சம் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Telangana Police!

OP Trucked Shyamal :

Open extortion in the name of excise on Telangana border!

Today, as I entered Telangana, I saw that at the same border which was closed by the government a long time ago, illegal extortion of ₹20 to ₹200 was being done from truck… pic.twitter.com/UuHGGYC1EE— COPWATCH INDIA (@copwatchIN) July 30, 2026

இதனைத் தட்டிக்கேட்டவுடன், அங்கிருந்த அதிகாரி உடனேச் சென்று அவசர அவசரமாக முழுச் சீருடையை அணிந்துகொண்டு வந்து பேசியுள்ளார். இந்தச் சட்டவிரோத வசூலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஷியாமல் சில நிமிடங்கள் சாலையை மறித்து, உயர் அதிகாரிகளை இடத்திற்கு வரவழைக்க முயற்சி செய்துள்ளார். தெலங்கானா காவல்துறையினரின் இந்த பகிரங்கக் கப்பம் வசூலிக்கும் செயல் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு ஆகியவை லாரி ஓட்டுநர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, இணையத்திலும் வைரலாகி கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in