“30 வருஷ பாசம் சார்..!” தியேட்டரிலேயே கதறி அழுத அமைச்சர்கள்.. கிளம்பிய விமர்சனங்களுக்கு அமைச்சர் விக்னேஷ் கொடுத்த நச் பதில்.. வாயடைத்துப்போன விமர்சர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“30 வருஷ பாசம் சார்..!” தியேட்டரிலேயே கதறி அழுத அமைச்சர்கள்.. கிளம்பிய விமர்சனங்களுக்கு அமைச்சர் விக்னேஷ் கொடுத்த நச் பதில்.. வாயடைத்துப்போன விமர்சர்கள்..!!

Published

on

முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கண்ட அமைச்சர்கள் உணர்ச்சிவயப்பட்டு அழுது புலம்பிய நிகழ்வு இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், அது தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார். திண்டுக்கல்லில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், “கடந்த 30 ஆண்டுகளாகச் சிறு வயது முதலே திரையில் பார்த்து ரசித்த நமது தலைவரை இனிமேல் சினிமாவில் பார்க்க முடியாதோ என்ற வேதனையிலும், தீவிரமான உணர்ச்சிப் பெருக்கிலும்தான் எங்களையுமறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது. நாங்கள் அழுது புலம்புவதை ஒரு பெரிய சர்ச்சையாக்கி விவாதிப்பதால் நாட்டிற்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது? விஜய் என்றும் எங்களுக்கு அன்பான தளபதிதான்” என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.

அதேசமயத்தில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வந்த காலகட்டத்தில் அமைச்சர்கள் சினிமா திரையரங்கிற்குச் சென்று படம் பார்த்ததைப் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எவ்வித பதிலையும் அளிக்காமல் தவிர்த்துவிட்டுச் சென்றுவிட்டார். மேலும், ஏற்கனவே அரசு அதிகாரிகளுடன் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் விஜய், மீண்டும் படக்குழுவினருடன் இணைந்து படத்தை பார்க்கத் திட்டமிட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பதவியிலிருந்த போதிலும் அவர் இன்னும் சினிமாவிலிருந்து முழுமையாக விலகவில்லை என்ற கருத்துக்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் இடையே எழத் தொடங்கியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in