CRIME
அடப்பாவமே! இப்படியும் ஒரு பழிவாங்களா?.. காதலனுடன் வாழ ஆசை… கணவர் கண்முன்னே மனைவி செய்த விசித்திர செயல்.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்… உறைந்துபோக வைக்கும் பின்னணி..!!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், கணவருடன் ஏற்பட்ட தீவிரக் குடும்பத் தகராறு மற்றும் விவாகரத்து பெற முடியாத மன உளைச்சலின் காரணமாக மனைவியின் அத்துமீறிய செயல்களும், அதற்குப் பதிலடியாகக் கணவர் எடுத்த ஆபத்தான முடிவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. காதலனுடன் சேர்ந்து வாழ விரும்பிய பெண்ணுக்கு கணவர் குடும்பத்தினர் விவாகரத்து தர மறுத்ததால், அவர்களுக்குத் தொந்தரவு அளிக்கும் நோக்கில் அந்தப் பெண் ஆன்லைனில் வாங்கிய பொருளைக் கொண்டு கணவர் கண்முன்னே சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த கணவர், அந்தப் பெண் பயன்படுத்திய பொருளில் ஆபத்தான வேதிப்பொருளான வெண்காரத்தை தடவியுள்ளார். இதன் காரணமாக அப்பெண்ணுக்குக் கடுமையான உடல் உபாதை மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டு, உடனடியாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இந்த விசித்திரமான மற்றும் கொடூரமான குற்றச்செயல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
