LATEST NEWS
ஜப்பானில் அடுத்தடுத்து பேரழிவு..!” சக்திவாய்ந்த நிலநடுக்கம்… பற்றி எரியும் நகரங்கள்… தடம்புரண்ட ரயில்.. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… உறைந்துபோன உலகம்..!!
ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கியூஷூ தீவிற்கு உட்பட்ட குமாமோட்டாவில், ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அதிர்வின் காரணமாக வர்த்தக நிறுவனம் ஒன்றில் தீப்பிடித்து எரிந்து நாசமானதில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், பயணிகள் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் ஒன்று தடம்புரண்டதோடு, சாலைகளில் பெரும் பிளவுகள் ஏற்பட்டு பல இடங்களில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தீவிரத்தால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதோடு, சுமார் 40 ஆயிரம் வீடுகளில் மின்சார விநியோகமும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர் அதிர்வுகள் மற்றும் கடுமையான சேதங்கள் காரணமாகக் குமாமோட்டா பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் பீதியிலும் அதிர்ச்சியிலும் உறைந்துள்ளனர். அப்பகுதியில் மீட்புப் பணிகளும், மின்சார விநியோகத்தைச் சீரமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
