CRIME
“அடப்பாவமே..! ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட 12-ஆம் வகுப்பு மாணவி… போலீஸ் லாக்-அப்பில் பீட்சாவும்… கொசு விரட்டியும் கேட்கும் குற்றவாளியின் பகீர் கோரிக்கை…!!”
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் திகோரி பகுதியில் உள்ள ஒரு வாடகை பிளாட்டிலிருந்து, 12-ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவியை காவல்துறை பத்திரமாக மீட்டுள்ளது. மூத்த அரசு அதிகாரி ஒருவரின் மகளான அந்தச் சிறுமியை, குற்றவாளி 24 மணி நேரத்திற்கும் மேலாகப் பிணையாக அடைத்து வைத்திருந்தான். சிறுமிக்கு போதைப்பொருள் கலந்த சாக்லேட்டைக் கொடுத்து மயக்கி, பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கத்தி மற்றும் சாட்டையால் தாக்கி ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டியதும் தெரியவந்துள்ளது. திங்கள்கிழமை நள்ளிரவு கதவை உடைத்து உள்ளே சென்ற காவல்துறையினர், உடலெங்கும் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி, மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து அதிலிருந்து தப்பிக்க முயன்றான். மேலும், சிறுமியின் கைபேசியைக் கைப்பற்றி வைத்திருந்த அவன், தனது தொலைபேசி மற்றும் சிறுமியின் தொலைபேசிக்கான கடவுச்சொல்லைப் காவல்துறையிடம் தெரிவிக்க முற்றிலும் மறுத்துவிட்டான். இருப்பினும், குற்றவாளியிடம் இருந்து சிறுமியின் பல ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இவ்வளவு கொடூரமான குற்றத்தைச் செய்த பிறகும், காவல் லாக்-அப்பில் இருக்கும் குற்றவாளியின் வி.ஐ.பி ஆடம்பரக் கோரிக்கைகள் ஓயவில்லை. லாக்-அப்பில் உள்ள கழிப்பறை மற்றும் சுவர்கள் சுத்தமாக இல்லை என்று புகார் தெரிவித்துள்ள அவன், காலை உணவாக பீட்சா, உயர்தர உணவு, மென்மையான மெத்தை மற்றும் கொசு விரட்டி ஆகியவற்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளான். குற்றவாளியிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து, கொலை முயற்சி மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
