LATEST NEWS
ஐயோ கடவுளே..! மனைவியைப் பழிவாங்க ஃபேஸ்புக் லைவ்வில் கணவன் விபரீத முடிவு.. நெட்டிசன்களை அழவைத்த வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி அடுத்த இசாத்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஹாட்கஞ்ச் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக் லைவ் மூலம் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன்னி என்ற அந்த இளைஞருக்கும், அவரது மனைவி காஜலுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த காஜல், கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அதன் பின்னரும், தொலைபேசி வாயிலாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு வெடித்ததாகக் கூறப்படுகிறது.
🚨 ब्रेकिंग न्यूज़। बरेली!
📍पत्नी से विवाद के बाद युवक ने खुद को लगाई फांसी!
➡️ फेसबुक लाइव कर युवक ने लगाई फांसी
➡️ युवक ने फांसी का वीडियो सोशल मीडिया पर किया वाइरल
➡️ विवाद के बाद काजल नाराज होकर चली गयी थी मायके
➡️ फोन पर बातचीत के दौरान फिर से दोनो में हुआ था विवाद
➡️… pic.twitter.com/ydSVl8aDON— सिटी टाइम्स । CITY Times (@CityTimes2421) August 19, 2026
இதனால் கடுமையான ஆத்திரமடைந்த சன்னி, தனது மனைவியைப் பழிவாங்கும் நோக்கில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளும் காட்சியை ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளார். இந்த தற்கொலை வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சன்னியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
