LATEST NEWS
CM கவனமாக இருந்திருக்க வேண்டாமா..? பேரவை உரையில் விடுபட்ட முக்கிய அம்சம்..! அதிகாரிகளின் அலட்சியத்தால் முதலமைச்சர் விஜய்க்கு நேர்ந்த அரசியல் சங்கடம்..!!
தொகுதி மறுவரையறை தொடர்பான தவெகவின் யூ-டர்ன் நிலைப்பாடு, அக்கட்சியின் அரசுக்கு அரசியல்ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முதலமைச்சர் விஜய்யின் உரையில் இடம்பெறாமல் போனதற்கு, அதிகாரிகளின் அலட்சியமே முக்கிய காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முதலமைச்சரின் உரையை அரசியல்ரீதியாகவும் நிர்வாகரீதியாகவும் சரிபார்க்கும் பொறுப்பு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கே உள்ளது எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. அதேவேளையில், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் முதலமைச்சரும் கூடுதல் கவனத்துடன் இருந்திருக்க வேண்டாமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.
