LATEST NEWS
“No Delimitation டூ Fair Delimitation” தொகுதி மறுவரையறை விவகாரத்தில்… ஒரே வாரத்தில் அதிரடியாக நிலைப்பாட்டை மாற்றிய முதலமைச்சர் விஜய்..!!
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் அவர்கள் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ள விபரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தொடரில், மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செய்த தென் மாநிலங்களின் மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்றும், தொகுதி மறுவரையறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இன்றைய கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் விஜய், இந்த விவகாரத்தில் நியாயமான அணுகுமுறை தேவை என்ற புதிய நிலைப்பாட்டிற்கு மாறியுள்ளார்.
இன்றைய விவாதத்தின் போது, மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யும் போது எந்தவொரு சூழலிலும் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாததைச் சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் பேரவையில் வலியுறுத்தியுள்ளார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அதே வேளையில், நாட்டின் ஒட்டுமொத்தப் பிரதிநிதித்துவமும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் இந்த மாற்றுப் பேச்சை அவர் முன்வைத்துள்ளார். கடந்த வாரம் ‘தொகுதி மறுவரையறையே கூடாது’ என்று கூறிவிட்டு, தற்போது ‘நியாயமான முறையில் சட்டப் பாதுகாப்புடன் செய்ய வேண்டும்’ என முதலமைச்சர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பது அவையில் காரசார விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
