LATEST NEWS
எனக்கு அந்த நோய் இருக்கு.. அதனால நான் ரேஷன் அரிசி தான் சாப்பிடுறேன்… ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இருந்தாலும்… ரேஷன் அரிசி சாப்பிடுவதற்கான காரணத்தை உடைத்த கே.என்.நேரு…!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ரேஷன் அரிசி விநியோகம் தொடர்பாக திமுக மற்றும் தவெக இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது. விவாதத்தின் தொடக்கமாகப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ரேஷன் அரிசியைச் சிலர் ஆட்டுக்கும் கோழிக்கும் தீவனமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதுதான் நாடறிந்த உண்மை என்று குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மற்றொரு முன்னாள் அமைச்சரான கே.என்.நேரு அவர்கள் சர்க்கரை நோய் கம்மியாகும் என்பதற்காக ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறார் என்ற ஒரு முக்கிய தகவலை அவையில் பகிர்ந்தார்.
இந்த விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்து வருவதாகக் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். ஆனால், தற்போது ஒரு பரம ஏழையைப் போல அவர் ரேஷன் அரிசி சாப்பிடுவதாக ஒரு புது தகவலைச் சொல்லியுள்ளார் என்று கே.என்.நேருவின் கூற்றை விமர்சித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவையில் பேசினார். இந்தத் தொடர் விவாதங்கள் ரேஷன் அரிசி பயன்பாடு குறித்த காரசாரமான அரசியல் விவாதமாக சட்டமன்றத்தில் உருவெடுத்தது.
இறுதியாக இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த கே.என்.நேரு, தனக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இருந்தாலும் எதைச் சாப்பிட வேண்டுமோ அதைத்தான் சாப்பிட முடியும் என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், தான் தனது சொந்த விருப்பத்தினாலோ அல்லது ஏழ்மையினாலோ ரேஷன் அரிசியைச் சாப்பிடவில்லை என்றும், மருத்துவர் ஆலோசனையின்படிதான் ரேஷன் அரிசி சாப்பிடுகிறேன் என்றும் கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
