LATEST NEWS
“அந்த அரிசி என்ன மாறி கருப்பா இருக்கும்!” உங்கள மாறி சிகப்பா இருக்காது… ரேஷன் அரிசி விவாதத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் வைரல் கவுண்டர்!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் ரேஷன் அரிசியின் தரம் மற்றும் விநியோகம் குறித்த விவாதம் நடைபெற்ற போது, முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நகைச்சுவையாகவும் அதே சமயம் எதார்த்தமாகவும் பேசிய கருத்து அவையில் பெரும் கலகலப்பை ஏற்படுத்தியது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் நிறம் மற்றும் தரம் குறித்துப் பேசிய அவர், “அந்த அரிசி என்ன மாறி கருப்பா இருக்கும், உங்கள மாறி சிகப்பா இருக்காது” என்று சபாநாயகரை நோக்கித் தனக்கே உரிய பாணியில் குறிப்பிட்டார்.
இவருடைய இந்தத் திடீர் ஒப்பீட்டைக் கேட்டு அவையில் இருந்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பலத்த சிரிப்பொலி எழுப்பினர். இந்த நகைச்சுவையானப் பேச்சால் மாண்புமிகு சபாநாயகர் அவர்களும் புன்னகைத்தபடி அவரது கருத்தை ரசித்தார். அவையில் சில நேரங்களில் நிலவும் காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில், அமைச்சரின் இத்தகைய கலகலப்பான உரையாடல் சட்டமன்றத்தில் ஒரு சுமுகமான மற்றும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கியது.
