LATEST NEWS
“உள்ளாட்சித் துறை இன்னும் உங்க கண்ட்ரோல்லதான் இருக்கு” ஆட்சி மாறினாலும் அதிகாரம் மாறல… அமைச்சர் நேருவை மேடையிலேயே வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!
சென்னை மேயர் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை என்றும், தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் உள்ளாட்சித் துறையில் இன்னும் அதிகாரம் மாறவில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளும், ஒட்டுமொத்த உள்ளாட்சித் துறையும் இன்னும் திமுகவின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு உடனடியாகப் பதிலளித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உள்ளாட்சித் துறையில் எவ்வித பாரபட்சமும் காட்டப்படுவதில்லை என்றும், அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் பணிகள் தொய்வின்றி சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் கூறி ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டை மறுத்தார். சென்னை மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் அரசின் வழிகாட்டுதலின்படியே சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அவர் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக இரு அமைச்சர்களிடையே சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் வெடித்தது.
