LATEST NEWS
#BREAKING: சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!
முதுபெரும் தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தனது 90-வது வயதில் மதுரையில் காலமானார். அவரின் மறைவுக்குத் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எளிய தமிழில் ஆழமான இலக்கியக் கருத்துக்களைப் பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த அவரது மறைவு, தமிழ் உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
