“ஐயோ கொடுமையே..” திருமணமாகி 5 வது நாளில் நேர்ந்த கொடூரம்.. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ கொடுமையே..” திருமணமாகி 5 வது நாளில் நேர்ந்த கொடூரம்.. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, திருமணமாகி வெறும் ஐந்தே நாட்களே ஆன சுஜிதா (25) என்ற புதுப்பெண் விவசாயக் கிணற்றில் குதித்து மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பி.எஸ்.சி., பி.எட். பட்டதாரியான இவர், வாசுதேவனூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் (27) என்ற வாலிபருக்கும் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதிதான் உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சுஜிதா திடீரென வெளியே சென்றுள்ளார்; ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரைப் பல்வேறு இடங்களில் தேடியபோது, வீட்டின் அருகே இருந்த ஒரு விவசாய நிலத்து உறைக்கிணற்றில் சுஜிதா குதித்துத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியுடன் கண்டறியப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் போலீசார் சுஜிதாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்; மேலும், திருமணமான ஐந்தே நாட்களில் இந்த இளம் பட்டதாரிப் பெண் தற்கொலை செய்துகொண்டதற்கான அசல் காரணம் குடும்பத் தகராறா அல்லது வரதட்சணை கொடுமையா என்ற கோணத்தில் போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in