LATEST NEWS
வெள்ளை நிற உடையில் ரசிகர்களை மயக்கும் நடிகை மிருணாள் தாகூர்….. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மிருணாள் தாகூர். ஹிந்தி, மராத்தி,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீதாராமன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என பழமொழிகளிலும் வெளியானது. ராஷ்மிகா மந்தனாவுக்கு போட்டியாக இந்த திரைப்படத்தில் மிருணால் தாகூர் நடித்த அசத்தி இருந்தார்.
இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.தெலுங்கில் அதிக பட வாய்ப்புகளை பெற்று வரும் இவர் தற்போது நான்கு படங்களில் கமிட் ஆகியுள்ளார். சீதாராமன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் துல்கர் சண்முகனுக்கு ஜோடியாக நடித்து பாராட்டுகளை பெற்றார். கிட்டதட்ட 20 வருடங்களுக்கு முன்பு ராணுவ வீரர் தனது காதலிக்கு எழுத கடிதத்தை மீண்டும் அவரிடம் சேர்ப்பது தான் இந்த படத்தின் கதையாக இருந்தது.
இந்தத் திரைப்படத்தில் இவர் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்.ஃபேஷன் டிசைன் கவுன்சிலிங் ஆப் இந்தியா மற்றும் லக்ஷ்மி ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவரின் அலங்கார உடை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
