LATEST NEWS
“எங்களை விட்டுப் போகாதீங்க” தாய்நாடு திரும்பிய இந்தியக் குடும்பத்தைக் கட்டிப்பிடித்து கதறி அழுத பக்கத்துவீட்டு அமெரிக்கப் பாட்டி.. இணையவாசிகளை நெகிழ வைத்த நெகிழ்ச்சி வீடியோ..!
அமெரிக்காவில் வசித்து வந்த தெலுங்குக் குடும்பம் ஒன்று, நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப முடிவெடுத்தது. அவர்கள் கிளம்பும் தருணத்தில், அங்கிருந்த அவர்களின் வயதுமுதிர்ந்த அமெரிக்க அண்டை வீட்டுப் பெண்மணி, அக்குடும்பத்தைப் பிரிய மனமில்லாமல் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார். நீண்டகாலமாகத் தன் சொந்தக் குடும்ப உறுப்பினர்களைப் போல அவர்களுடன் நெருக்கமாகப் பழகி வந்ததால், அவர்களது பிரிவைத் தாங்க முடியாமல் அக்குடும்பத்தினரைக் கட்டிப்பிடித்துக் கண்ணீர் விட்டு அழுதார்.
சொந்த பந்தங்களைக் கடந்து மனிதநேயத்தாலும் அன்பாலும் பிணைக்கப்பட்டிருந்த அந்த அண்டை வீட்டுப் பெண்மணியின் அன்பைக் கண்டு அத்தெலுங்குக் குடும்பத்தினரும் உருகிப் போயினர். எல்லையற்ற மனித நேயத்திற்கும், மொழியையும் தேசத்தையும் தாண்டிய தூய்மையான அன்பிற்கும் எந்தவிதமான எல்லைகளும் தடைகளும் இல்லை என்பதை இந்த உருக்கமான நிகழ்வு மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
