LATEST NEWS
பகீர்..! ‘பால்கனியைப் பயன்படுத்திக் கொள்ளவா…?’ உபர் பார்சல் ஊழியரின் செயலால் அச்சமடைந்த இன்ஃப்ளூயன்சர்..! பெங்களூரு பெண் பிரபலத்திற்கு நேர்ந்த சம்பவத்தின் முழுப் பின்னணி..!!
பெங்களூரைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும் 3.49 லட்சம் பின்தொடர்பாளர்களைக் கொண்டவருமான அனேரி தாக்கர், உபர் பார்சல் ஊழியரால் தனக்கு நேர்ந்த ஒரு ஆபத்தான சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தன் வீட்டில் தங்கிச் சென்ற தோழியின் ஜாக்கெட்டைத் திருப்பியனுப்ப இரவு 9:30 மணியளவில் உபர் பார்சல் சேவையை அவர் பதிவு செய்துள்ளார். ஆனால், பார்சலை வாங்க வந்த ஊழியர் மது அருந்திவிட்டு வந்து, தனக்கு பாதுகாப்பற்ற மற்றும் அசௌகரியமான சூழலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பார்சல் வாங்க வந்த ஊழியர், முதலில் ஒரு கேரி பேக் கேட்டு வாங்கிவிட்டு, தன் கைபேசியில் சார்ஜ் குறைவாக இருப்பதாலும் செல்ல வேண்டிய இடம் தூரமாக இருப்பதாலும் தான் சிகரெட் பிடித்துவிட்டு வரும் வரை போனை சார்ஜ் போடுமாறு கேட்டுள்ளார். தொடர்ந்து, வீட்டின் பால்கனியில் நின்று சிகரெட் பிடிக்க அனுமதிக்குமாறு வீட்டிற்குள் வர முயன்றுள்ளார். ஆனால், தோழி தூங்குவதாகக் கூறி அனேரி அதை மறுத்துள்ளார். அந்த நபரின் போனில் 45% சார்ஜ் இருந்ததைப் பார்த்த அனேரிக்கு சந்தேகமும் பயமும் ஏற்பட்டு, உடனடியாக தனது கட்டிடப் பாதுகாப்பு ஊழியரை மேலே வருமாறு அழைத்துள்ளார்.
https://www.instagram.com/reel/Dbi4uHmyL5T/?utm_source=ig_web_button_share_sheet
செயலியில் எண்கள் இணைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த ஊழியர் அனேரியின் தனிப்பட்ட போன் நம்பரை கேட்டு வற்புறுத்தியுள்ளார். செயலியில் உள்ள எண் மறைக்கப்பட்டிருக்கும் என்பதால், நேரில் அழைக்கவே அவர் போன் நம்பர் கேட்பதாக உணர்ந்த அனேரி, பயத்தின் காரணமாகத் தனது எண்ணைக் கொடுத்துள்ளார். மேலும், அந்த நபரிடம் இருந்து 2 மீட்டர் தூரத்திலிருந்தே கடுமையான மது வாசனை வீசியதாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து உபர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். குறுகிய நேரத்தில் 4,35,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ குறித்து உபர் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை.
