CRIME
ஐயோ என்ன கொடுமை இது..! 2 மாத கர்ப்பிணி என்றும் பார்க்காமல்…மாமனார் வீட்டார் செய்த கொடூரம்… நினைவாற்றலை இழந்து பரிதவிக்கும் பெண்… நெஞ்சை பறவைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசௌர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், தற்போது அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். வரதட்சணையாகக் கூடுதல் பணம் மற்றும் பொருட்கள் கேட்டு, அப்பெண்ணை அவரது கணவர் வீட்டார் தொடர்ந்து கொடூரமாகச் சித்திரவதை செய்து வந்துள்ளனர். சில ஆயிரம் ரூபாய்க்காக ஆசைப்பட்டு, அந்த கர்ப்பிணிப் பெண்ணை அவரது மாமனார் வீட்டினர் ஈவிரக்கமின்றித் தாக்கியதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ससुराल वालों ने चंद रुपयों के लिए 2 महीने की प्रेग्नेंट महिला को इतना मारा पीटा कि उसकी याददाश्त ही चली गई।
यह मामला मंदसौर का है जहां एक बेटी की एक साल पहले शादी हुई थी। अभी 2 महीने की प्रेग्नेंट हैं। परिवार का आरोप है कि ससुराल वालों ने इतना मारा-पीटा कि सिर में चोट लग गई। ओर… pic.twitter.com/JdPhu2fhGf— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 8, 2026
இந்தக் கொடூரத் தாக்குதலின் காரணமாக அந்தப் பெண் தனது பழமையையும் நினைவாற்றலையும் முற்றிலும் இழந்து, மனநிலை பாதிக்கப்பட்டு விசித்திரமாக நடந்துகொள்ளத் தொடங்கியுள்ளார். பெற்றோரால் ஆசையாகத் திருமணம் செய்து அனுப்பி வைக்கப்பட்ட மகள், தற்போது நினைவாற்றலை இழந்து பரிதவிக்கும் நிலையைக் கண்டு அவரது குடும்பத்தினர் கதறித் துடிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தால் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வரதட்சணை வெறிக்கு பெண்கள் இன்னும் எத்தனை காலம் பலியாகப் போகிறார்கள் என்ற கேள்வி சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
