LATEST NEWS
‘இந்தியாவுக்கு வராதீர்கள்..’! ரத்த வெள்ளத்தில் அலறிய வெளிநாட்டுப் பயணி.. தாஜ்மஹாலில் நேர்ந்த சோகம்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலின் கிழக்கு நுழைவாயில் அருகே தென்கொரிய சுற்றுலாப் பயணி ஒருவரை குரங்கு கடித்ததில், அவருக்குக் பலத்த காயமும் அதிக இரத்தப்போக்கும் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, நாட்டின் முக்கியப் பாரம்பரியத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவசரக்கால மருத்துவத் தயார்நிலை குறித்த கடுமையான விவாதங்களை இணையத்தில் தீவிரப்படுத்தியுள்ளது.
A monkey attacked a South Korean woman tourist at the Taj Mahal in Agra, biting her on the hand and causing bleeding.
The injured tourist reportedly had to wait for nearly an hour for an ambulance while she remained in severe pain.
— Her companion asked people, “Where do we go?”… pic.twitter.com/uZgSFblG0V— زماں (@Delhiite_) July 28, 2026
தாக்குதல் நடந்த உடனே இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவித்தும், ஆம்புலன்ஸ் வர ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமானதாகக் கூறப்படுகிறது. இதனால், காயமடைந்த சுற்றுலாப் பயணிக்கு முதலில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மின்கல வாகனத்தின் மூலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த அலட்சியப்போக்கு குறித்து ASI பாதுகாப்புப் பிரிவு சார்பில் தலைமை மருத்துவ அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை கோரப்பட்டுள்ளது.
இந்தத் தாமதமும் பாதுகாப்புக் குறைபாடும் இணையவாசிகளிடையே பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கும், இதுபோன்ற நிர்வாகச் சீர்கேடுகளும் அவசர உதவி கிடைப்பதில் உள்ள தாமதங்களுமே முக்கியக் காரணம் என நெட்டிசன்கள் பலரும் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
