LATEST NEWS
“அறைவேன்… உன்னால் எதுவும் செய்ய முடியாது..!” ஆட்சியர் அலுவலகத்தில் பெண் போலீஸின் கொடூர மிரட்டல்.. பதறவைக்கும் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு ஹிதேஷ் லக்கானி என்பவர் தனது மனைவியுடன் ஆவணப் பணிகளுக்காகச் சென்றுள்ளார். சுமார் 1.5 மணி நேரம் அமைதியாகக் காத்திருந்த பிறகு, பணி முடிய இன்னும் எவ்வளவு நேரமாகும் என்று அவர் பணிவுடன் கேட்டபோது அங்கிருந்த ஊழியர் ஒருவர் இன்ஸ்டாகிராம் செயலியைப் பயன்படுத்தியபடி அவரை அலட்சியப்படுத்தியுள்ளார். தொடர்ந்து அவர் மற்றொரு அதிகாரியிடம் தகவலைக் கேட்க முயன்றபோது, குறுக்கே வந்த பெண் காவலர் ஒருவர், “அமைதியாக உட்கார், தேவையில்லாமல் பேசினால் அறைந்துவிடுவேன்; உன்னால் எதுவும் செய்ய முடியாது” என்று அவரிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டு மிரட்டியுள்ளார்.
हितेश लखानी नाम के एक व्यक्ति अपनी पत्नी के साथ डॉक्यूमेंटेशन प्रक्रिया के लिए कलेक्टरेट कार्यालय, इंदौर (मध्य प्रदेश) गए थे। उन्होंने लगभग 1.5 घंटे इंतज़ार किया।
जब उन्होंने विनम्रता से पूछा कि अभी और कितना समय लगेगा, तो उन्हें नज़रअंदाज़ कर दिया गया, जबकि स्टाफ का एक सदस्य… pic.twitter.com/O5omM9nyJs— Ravindra Upadhyay (@Ravindrau07) July 30, 2026
எந்தவித கூச்சலும் போடாமல் அமைதியான முறையில் கேள்வி கேட்ட ஒரு குடிமகனிடம் அதிகாரிகள் நடந்துகொண்ட இந்த முறையற்ற நடத்தை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவலான எதிர்ப்பைப் பெற்றுள்ளது. அரசு அலுவலகங்களில் பணி செய்ய வரும் அனைத்துக் குடிமக்களும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்றும், அதிகாரிகளின் இதுபோன்ற அலட்சியப் போக்கையும் மிரட்டலையும் தடுக்க சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
