LATEST NEWS
அதிர்ச்சி..! முதலமைச்சர் விஜய் பெயரைப் பயன்படுத்தி அரங்கேறிய மெகா சைபர் க்ரைம்… மத்தியப் பிரதேச கும்பல் அட்டகாசம்..!!
தமிழக முதலமைச்சர் விஜய் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருவதாகக் கூறி, மத்தியப் பிரதேசத்தில் சைபர் குற்ற கும்பல் ஒன்று ரூ.10 லட்சம் வரை பண மோசடி செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏழைகளுக்கு உதவுவதாகக் கூறி இந்த மோசடியை அந்த கும்பல் அரங்கேற்றியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் போலீசார் 6 வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள இந்த சைபர் குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோசடி கும்பலை விரைந்து பிடிக்கவும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காகவும் இந்தூர் போலீசார் தமிழக காவல்துறையின் உதவியைக் கோரியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
