LATEST NEWS
சூர்யாவின் அடுத்த படம் இதுவா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இவர் தற்போது “சுரரை போற்று“ எனும் படத்தில் நடித்து முடித்து உள்ளார். அடுத்ததாக இவர் அருவா என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் இப்படம் உருவாக உள்ளது. சூர்யாவின் சிங்கம் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இசையமைப்பாளர், ஒளிபதிவாளர்கள் யார் என்பது இன்னும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் குறித்து லேட்டஸ்ட் தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த போஸ்ட்களால் ரசிகர்கள் பெரும் இன்பம் அடைந்து உள்ளனர்.
அதாவது வரும் ஏப்ரல் 9-ம் தேதி முதல் ஒரே கட்ட படப்பிடிப்பாக மிகவும் வேகமாக இப்படத்தை முடிக்க உள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருநெல்வேலி போன்ற தமிழக தென் மாவட்டங்களில் இடங்களில் நடைபெற உள்ளது.
மேலும் இப்படம் எமோஷனல் கலந்த குடும்பங்கள் கொண்டாடும் கிராமத்து அம்சம் கதையாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த செய்திகளை அறிந்த ரசிகர்கள் பெரும் ஆரவாரத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
