“அமைச்சர்னு பேர்தான்… மக்களுக்கு ஒண்ணுமே பண்ண முடியல!”.. சொந்தக் கட்சியினர் மீதே அமைச்சர் சரத்குமார் பகிரங்கக் குற்றச்சாட்டு.. தமிழக அரசியலில் வெடித்த புது சர்ச்சை.!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அமைச்சர்னு பேர்தான்… மக்களுக்கு ஒண்ணுமே பண்ண முடியல!”.. சொந்தக் கட்சியினர் மீதே அமைச்சர் சரத்குமார் பகிரங்கக் குற்றச்சாட்டு.. தமிழக அரசியலில் வெடித்த புது சர்ச்சை.!!

Published

on

தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் கடப்பேரி திருநீர்மலை பகுதியில் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சரத்குமார், பொதுமக்களுக்கு தையல் இயந்திரங்கள், அரிசி மூட்டைகள் மற்றும் ஹாட் பாக்ஸ் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் மேடையில் உரையாற்றிய அவர், தான் அமைச்சராகவும் தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தபோதிலும், தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகளின் தலையீட்டால் தனது தொகுதி மக்களுக்கு நினைத்த காரியங்களைச் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், அதிகாரிகள் மூலம் ஏதேனும் மக்கள் பணிகளை மேற்கொள்ள முயன்றாலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதைத் தடுத்து நிறுத்துவதாகவும், தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் என்று கூறி அதிகாரிகளை வேலை செய்ய விடுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார். மீறிச் செயல்படும் அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவதாகவும், சொந்தக் கட்சியினரே இதில் அரசியல் லாபம் பார்க்க முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் இவர்களைத் தோற்கடித்து, முதல்வர் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பொதுமக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in