LATEST NEWS
FLASH: “எனக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லை”: ஆட்சிக்கவிழ்ப்பு புகார் குறித்து செந்தில் பாலாஜி விளக்கம்..!!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் ஆட்சி கவிழ்ப்புக்காக ₹35 கோடி பேரம் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர்.
கடந்த ஏழு நாட்களாக செந்தில் பாலாஜி தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூன் 27-ம் தேதிக்கு பிறகு அவர் எந்தவொரு கட்சி கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை என்றும், அவரது மொபைல் போன்கள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கும் அவர் கடந்த சில நாட்களாக வரவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில், தன் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தன் மீது பதியப்பட்டுள்ளதாகவும், எம்.எல்.ஏ-க்களுடனான குதிரை பேரத்திற்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
