CRIME
“அப்பா தான் அம்மாவை வெட்டினார்” ” 8 மாத கர்ப்பிணி தாயைக் கொன்ற தந்தையைக் காட்டிக்கொடுத்த 5 வயது மகன்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் உள்ள பாஜ்ராரி கிராமத்தைச் சேர்ந்த ஹனீப் மன்சூரி என்ற நபர் மதுப்பழக்கம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையாகி, தனது நிலத்தின் பெரும் பகுதியை விற்றுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு அவர் அதிகளவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தபோது, அவரது பழக்கத்தை 8 மாதக் கர்ப்பிணியாக இருந்த மனைவி மனிஷா தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஹனீப், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனிஷாவின் தலை, உடல் மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்தார்.
இந்தக் கொடூரச் சம்பவத்தை அவர்களின் 5 வயது மகனும், 2 வயது மகளும் நேரில் பார்த்து உறைந்து போயினர். கொலையை மறைக்க எண்ணிய ஹனீப், தானே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து ஒரு பொய் கதையைக் கூறி தப்பிக்க முயன்றார். ஆனால், இவர்களது 5 வயது மகன், காவல்துறையினரிடம் “அப்பா தான் அம்மாவை வெட்டினார்” என்று நேரில் பார்த்ததை வாக்குமூலமாகக் கூறினான். குழந்தையின் இந்த உறுதியான வாக்குமூலத்தால் ஹனீப் மாட்டிக்கொண்டார்; காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2021-இல் திருமணமான மனிஷாவை, ஹனீப் சந்தேகப் புத்தியால் அடிக்கடி அடித்துத் துன்புறுத்தி, பலமுறை வீட்டை விட்டுத் துரத்தியபோதும் குடும்பத்திற்காகப் பொறுத்துக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இச்சம்பவம் குறித்துப் பேசிய ஹனீபின் தந்தை, “என் மகன் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்துவிட்டான், அவனுக்கு தூக்கு தண்டனை அளித்தாலும் தகும்” என்று கூறி, தாய் இழந்த இரண்டு பேரக் குழந்தைகளையும் தானே வளர்க்கப்போவதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். பிஞ்சுக் குழந்தைகளின் கண் முன்னே நிகழ்ந்த இந்த கொடூரக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
