LATEST NEWS
“நான் கி.பி. 4413-க்கு போயிட்டு வந்தேன்..!” மனிதகுலத்திற்கு பிரிட்டன் அதிகாரி விடுத்த இறுதி எச்சரிக்கை… ஆடிப்போன அறிவியல் உலகம்..!!
1977-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிய ஆபத்தான ரகசிய கால இயந்திரப் பரிசோதனை ஒன்றில் பங்கேற்றதன் மூலம், தான் கி.பி. 4413-ஆம் ஆண்டிற்குப் பயணித்து வந்ததாக லூயிஸ் வாக்கர் என்ற லண்டன்வாசி வெளியிட்ட நேர்காணல் தகவல் உலகளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அந்த அதிநவீன எதிர்கால உலகத்தில் மனித நடமாட்டமே இல்லாத விசித்திரமான மருத்துவமனையில் விழித்தெழுந்த அவர், வெளியே வந்து பார்த்தபோது விண்ணில் கார்கள் பறப்பதையும், ஒட்டுமொத்தப் பூமிக்கண்டத்தையும் ரோபோக்களே ஆட்சி செய்வதையும் கண்டு உறைந்துபோனதாகத் தெரிவித்துள்ள இந்தக் கூற்று, சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
மேலும், 2028-ஆம் ஆண்டிலேயே டைம் டிராவல் தொழில்நுட்பம் பொதுமக்களுக்குச் சாத்தியமாகும் என்று கூறியுள்ள வாக்கர், மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்த கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களின் அபரிமிதமான வளர்ச்சியால், எதிர்காலத்தில் மனித இனம் முற்றிலும் அழிந்துபோய், பூமியில் ரோபோக்களின் நாகரிகமே மேலோங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கை, ஏற்கனவே AI தொழில்முறை மாற்றங்கள் மற்றும் அதன் அபாயங்கள் குறித்துக் கவலைப்பட்டு வரும் உலக மக்களிடையே மேலும் பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், லூயிஸ் வாக்கரின் இந்த அதிரடி உரிமைகோரல்களை உறுதிப்படுத்த இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அல்லது அறிவியல் பூர்வ ஆதாரங்களும் வெளியாகவில்லை. 1977-லேயே பிரிட்டன் ரகசிய கால இயந்திரத்தை உருவாக்கியதாகக் கூறுவது மற்றும் நேர்காணலில் அவரது முகம் மறைக்கப்பட்டிருப்பது போன்றவை இதன் நம்பகத்தன்மை மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. அறிவியல்பூர்வமாக டைம் டிராவல் இன்னும் சாத்தியமாகாத நிலையில், மனிதர்கள் இல்லாத ரோபோக்களின் எதிர்கால உலகத்தைப் பற்றிய அவரது கூற்று சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
