CRIME
ஐயோ நெஞ்சே பதறுது.! கணவனைக் கொன்று குடலை உருவி பையில் அடைத்த மனைவி… வீட்டு உரிமையாளர் பார்த்ததும் நடந்த பயங்கரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்..!!
ஹரியானாவின் குருக்ஷேத்ரா அருகே பெஹோவா சாலையில் உள்ள ராஜ் பேலஸ் பகுதி வாடகை வீட்டில் வசித்து வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை, அவரது மனைவி விமலா தேவி கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாகக் கொலை செய்தார். மாலை நேரத்தில் தம்பதியினரிடையே எழுந்த மோதல் சத்தத்தைக் கேட்டு மாடிக்கு விரைந்த வீட்டு உரிமையாளர் ரிங்கு, ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், அவரது வயிற்றிலிருந்து வெளியே வந்த குடல்களை விமலா ஒரு பையில் அடைப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டு உரிமையாளரைப் பார்த்ததும் பதற்றமடைந்த விமலா, மாடியிலிருந்து கீழே குதித்ததில் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ராஜேஷின் வயிற்றில் 35 சென்டிமீட்டர் நீளத்திற்கு ஆழமான காயம் ஏற்படுத்தப்பட்டிருப்பதும், அவரது கல்லீரலின் கணிசமான பகுதி மற்றும் வலது சிறுநீரகம் ஆகியவை காணாமல் போயிருப்பதும் தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் நிலைய அதிகாரி சுரேந்தர் சிங் தலைமையிலான குழுவினர், அங்கிருந்து வெவ்வேறு அளவிலான 3 கத்திகளைக் கைப்பற்றி தடயவியல் சான்றுகளைச் சேகரித்தனர்.
திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாத இந்தத் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட விமலா பாரம்பரிய வைத்தியம் மற்றும் பேயோட்டுதல் போன்ற சடங்குகளில் ஈடுபட்டு வந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் கொலைக்கான சரியான காரணம் இன்னும் தெரியவரவில்லை; சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் வாக்குமூலம் மற்றும் தடயவியல் அறிக்கைகளின் அடிப்படையில் காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
