LATEST NEWS
விராட் கோலியின் ஒரே போன்கால்… “அவர் சொன்ன அந்த வார்த்தை” மீண்டும் ‘சிங்கம் போல’ சீறிய பி.வி. சிந்து… ஜப்பான் ஓபனைத் தட்டித்தூக்கி படைத்த வரலாற்றுச் சாதனை.!!
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனையான பி.வி. சிந்து, ஜப்பான் ஓபன் சூப்பர் 750 தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் அகானே யமகுச்சியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனைப் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர் தோல்விகள், எலும்பு முறிவு காயம் மற்றும் ஃபார்ம் இழப்பு எனப் பல்வேறு கடினமான சவால்களைச் சந்தித்து வந்த சிந்துவின் இந்த பிரம்மாண்ட மீட்சிக்குக் பின்னணியில், இந்திய கிரிக்கெட் வீராங்கனை விராட் கோலியுடன் அவர் பேசிய உரையாடல் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்குப் பிறகு ஃபார்ம் இல்லாமல் தவித்து, மன அழுத்தத்தில் இருந்த தருணத்தில், விளையாட்டு உலகின் உச்சத்தையும் பல விமர்சனங்களையும் கடந்து வந்த விராட் கோலியைச் சிந்து தொடர்புகொண்டு ஆலோசனைக் கேட்டுள்ளார். பட்டங்களை வெல்வதற்காக மட்டுமல்லாமல், விளையாட்டின் மீதான இயல்பான மகிழ்ச்சியைக் கண்டறியவே தான் விரும்புவதாகத் தெரிவித்த சிந்துவிடம், உச்சக்கட்ட அழுத்தங்களையும் விமர்சனங்களையும் ஒரு விளையாட்டு வீரராக எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், விளையாட்டின் மீதான விருப்பத்தைக் கண்டறிவது குறித்தும் கோலி சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
விராட் கோலி கூறிய அந்த ஆழமான வார்த்தைகள் தனது மனநிலையை முற்றிலும் மாற்றியதாகக் கூறியுள்ள சிந்து, “எனக்கு வழிகாட்டல் தேவைப்பட்ட அந்தத் தருணத்தில் ஆதரவாக நின்ற கோலிக்கு என்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன்” எனக் குறிப்பிப்பியுள்ளார். இந்த மனநிலை மாற்றத்தின் விளைவாகத் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டு களம் கண்ட சிந்து, ஜப்பான் ஓபன் தொடரைக் கைப்பற்றி தான் இன்னும் ஃபார்மில் தான் இருக்கிறேன் என்பதை உலகிற்கு மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார்.
