CRIME
“பகீர் சம்பவம்..! இளம் பெண்ணைப் பின்தொடர்ந்து வந்த ஆசாமி செய்த பகீர் காரியம்… தப்பிக்க முயன்றபோது நடந்த மரண கெத்து சம்பவம்.. வைரலாகும் திடுக்கிடும் வீடியோ..!!!”
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகாலை வேளையில் நடந்த இக்கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பணிக்குச் செல்லும் அவசரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில், இளம் பெண் ஒருவரை அந்த நபர் இரக்கமின்றி கத்தியால் குத்தியுள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோட முயன்ற குற்றவாளியை, சிறிதும் யோசிக்காமல் அங்குள்ள பொதுமக்கள் ஒன்றுதிரண்டு சுற்றி வளைத்துப் பிடித்து, உடனடியாகக் காவல்துறையிடம் ஒப்படைத்த துணிச்சல் பாராட்டத்தக்கதாக உள்ளது.
A man allegedly stabbed a young woman with a knife around 8 AM and attempted to flee the spot.
Locals present at the scene managed to apprehend him.
During questioning after being caught, it emerged that the accused is already divorced.
Despite this, he had been pursuing the… pic.twitter.com/pZZ17BHZSb— Ramesh Tiwari (@rameshofficial0) August 10, 2026
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபருக்கு ஏற்கனவே விவாகரத்து ஆகியிருந்த போதிலும், அவர் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து பின்தொடர்ந்து சென்று ‘ஸ்டாக்கிங்’ செய்து தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், தான் செய்த குற்றத்தை அவரே ஒப்புக்கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவம் மகாராஷ்டிராவின் எந்த குறிப்பிட்ட மாவட்டத்தில் நடைபெற்றது என்பது குறித்த துல்லியமான தகவல்களைக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டு வருகின்றனர்.
