CRIME
“ஐயோ கொடுமையே..! கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் டாக்டர் சடலம்..” கணவர், மாமனார் சேர்ந்து செய்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில், இயற்கை மருத்துவரும் முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை ஊழியருமான டாக்டர் குஷாலியின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2026 ஜனவரியில் டாக்டர் மயங்கைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு, திருமணத்திற்குப் பிறகு கடுமையான இன்னல்கள் தொடங்கின. மயங்க் மற்றும் அவரது தந்தை ஹரேந்திர சிங் ஆகியோர் குஷாலியைத் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளனர். குஷாலியின் உணவில் போதை மருந்துகளைக் கலந்து மயக்கமடையச் செய்த மயங்க், அவரது ஆட்சேபனைக்குரிய வீடியோக்களைக் காட்டி மிரட்டியதுடன், குஷாலிக்குத் தெரியாமல் அவரது பெயரில் 15 கடன்களைப் பெற்று சுமார் 12 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.
இந்தக் கொடுமைகளால் மனமுடைந்த குஷாலி கடந்த சில மாதங்களாகத் தனது தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில், அவரது சொந்த கிளினிக்கில் சடலமாக மீட்கப்பட்டார். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது; இருப்பினும், அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் அந்தச் சம்பவத்தின்போது அவரது இரு கைகளும் கட்டப்பட்டிருந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக டாக்டர் மயங்க் மற்றும் அவரது தந்தை ஹரேந்திர சிங்கை மீரட் காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
