“அய்யயோ.. திடீரென நுழைந்த அந்த மர்ம நபர்..” கண் இமைக்கும் நேரத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த டீ கடை உரிமையாளர்.. இணையத்தை பதறவைத்த சிசிடிவி வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யயோ.. திடீரென நுழைந்த அந்த மர்ம நபர்..” கண் இமைக்கும் நேரத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த டீ கடை உரிமையாளர்.. இணையத்தை பதறவைத்த சிசிடிவி வீடியோ..!!

Published

on

ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில், வீர் ரைஸ் மில் அருகே தனது தேநீர்க் கடையைச் சுத்தம் செய்துகொண்டிருந்த தேஜ்பீர் சிங் என்ற கடை உரிமையாளர், அடையாளம் தெரியாத நபர்களால் இரும்புத் தடியால் கொடூரமாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடையை வழக்கம்போலச் சுத்தம் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த கும்பல் ஒன்று அவரிடம் தகராறில் ஈடுபட்டு, கண் இமைக்கும் நேரத்தில் இரும்புத் தடியால் அவரது தலையிலும் உடலிலும் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இந்தத் துணிகரத் தாக்குதலில் படுகாயமடைந்த தேஜ்பீர் சிங் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

வீர் ரைஸ் மில் பகுதியில் பயங்கர மோதல் மற்றும் சண்டை நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கர்னால் உள்ளூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு இரத்த வெள்ளத்தில் கிடந்த தேஜ்பீர் சிங்கின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது தொழில் போட்டியில் அரங்கேறியதா என்ற கோணத்தில் போலீசார் தற்பொழுது வழக்குப்பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in