CRIME
பகீர்… காதல் திருமணம் செய்த 1.5 ஆண்டுகளில் சோகம்.. நள்ளிரவில் வீடு திரும்பிய மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன்..! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள பீகார்ஷரீஃப் பகுதியில், காதல் திருமணம் செய்துகொண்ட 26 வயது பெண் ரேகா, அவரது கணவர் சௌரவ் குமாரால் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் லஹேரி காவல் எல்லைக்குட்பட்ட படி பஹாடி பகுதியில் நடந்துள்ளது. இவர்களுக்கு இடையே நடந்த குடும்பத் தகராறு காரணமாக இக்கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த லஹேரி காவல் நிலைய போலீசார், கொலையாளியான கணவர் சௌரவ் குமாரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு ராஜ்கீரில் நடந்த சந்திப்பில், ஆர்கெஸ்ட்ராவில் நடனக் கலைஞராகப் பணியாற்றி வந்த ரேகாவிற்கும் சௌரவ் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், மகனின் பிடிவாதத்தால் ரேகாவைத் தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சௌரவ் வேலை விஷயமாக பஞ்சாப் சென்ற நிலையில், பஞ்சாபில் இருந்த ரேகா வியாழக்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் பீகார்ஷரீப்பில் உள்ள கணவரின் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே எழுந்த வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சௌரவ் சுத்தியலால் ரேகாவின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த லஹேரி போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பீகார்ஷரீஃப் மாடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வந்து அறிவியல் பூர்வ ஆதாரங்களைச் சேகரித்தனர். கைதான சௌரவின் தாய் சோபா தேவி கூறுகையில், ரேகா ஏற்கனவே தன் மகனை இரண்டு மூன்று முறை கத்தியால் தாக்கியதாகவும், சம்பவத்தன்றும் தங்களைத் தள்ளிவிட்டு தகராறில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். எனினும், காவல் ஆய்வாளர் ரஞ்சீத் குமார் ரஜக், முதற்கட்ட விசாரணையில் இது குடும்பத் தகராறால் நடந்த கொலை எனத் தெரியவந்துள்ளதாகவும், பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
