VIDEOS
நாங்க எல்லாம் அப்பவே அப்படி….! இப்ப சொல்லவா வேணும்….. பேருந்தில் ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டு நபர்….. பரபரப்பு….!!!!
பேருந்தின் பின்புறத்தில் ஒருவர் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு ஸ்கேட்டிங் செய்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. இந்தியாவில் உள்ள மக்கள் பலரும் பேருந்தில் செல்லும் போது படிகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றன. இது சட்டப்படி தவறு என்பதால் அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்திய மக்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதை பார்த்து வெளிநாட்டில் வாழும் இந்திய மக்கள் பலர் வெளிநாடுகளில் இது போன்ற பயணம் யாரும் செய்ய மாட்டார்கள் என்று கூறி பெருமை கொள்வார்கள்.
அவர்கள் கூறுவதெல்லாம் பொய் என்று கூறும் அளவிற்கு வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கோவையில் ஓடும் பேருந்தின் பின்புறம் உள்ள கம்பிகளை பிடித்துக்கொண்டு தனது ஸ்கேட்டிங் போர்டின் மூலம் ஸ்கேட்டிங் செய்து கொண்டு பயணம் செய்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. ஆனாலும் இவருக்கு பயம் என்றால் என்ன என்று தெரியாது போல மிகவும் கவனமாக ஒருபுறம் பேருந்துக்கு முன்பு என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டு ஸ்கேட்டிங் செய்து வருகிறார்.
கோவை அவினாசி சாலையில் அரசுப் பேருந்தை பிடித்தபடி ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணி
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.@abpnadu pic.twitter.com/iS9pC2QJRE
— Prasanth V (@PrasanthV_93) October 6, 2022
இப்படி இவர் பயணம் செய்யும் முறையை இரு சக்கர வாகன ஓட்டிகளின் ஒருவர் கண்காணித்து அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவர்கள் இருவரும் அந்த வெளிநாடு நபர் செய்யும் ஆபத்தான பயணத்தை பற்றி பேசிக்கொண்டே வீடியோ எடுக்கின்றன. அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. அவர் யார் என்பது தெரியவில்லை.
